மதுரை

மேலூர், கொட்டாம்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

DIN

மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டியில் கர்ப்பிணி பெண்கள் 365 பேருக்கு சமுதாய வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மேலூர் ஒன்றியத்தில் 195 பேருக்கு வண்ணான்பாறைப்பட்டியிலும் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 170 பேருக்கு கொட்டாம்பட்டியிலும் வளைகாப்பு நடத்தப்பட்டது. சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை மேலூர் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் நடத்தி வைத்தார். 
  குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் நூருல்அனிஷா (மேலூர்),  ரதிதேவி (கொட்டாம்பட்டி) மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் மேலூர், கொட்டாம்பட்டி பகுதி அதிமுக நிர்வாகிகள் பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT