மதுரை

பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

திராவிடர் கழக நிறுவனர் பெரியாரின் பிறந்த நாளையொட்டி மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் கட்சியின் மதுரை மாநகர், மாவட்ட அவைத் தலைவர் கே.துரைப்பாண்டியன் தலைமையில்,  மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன்,  நிர்வாகிகள் ராஜா, எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் மாநகரப் பொறுப்புக் குழுத் தலைவர் 
கோ.தளபதி தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.வேலுச்சாமி,  பெ.குழந்தைவேலு,  ஆ.தமிழரசி, ஜெயராமன், டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், எம்.எல். ராஜ் ஆகியோருடன் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் புதூர் கே.பூமிநாதன், அவைத் தலைவர் சின்னசெல்லம், தொழிற்சங்க இணைப் பொதுச் செயலர் மகபூப்ஜான் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
அமமுக மாநகர மாவட்டச் செயலர் ஜெயபால் தலைமையில் அக் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  திராவிடர் கழகம் சார்பில் தென்மண்டல பிரசார செயலர் எடிசன் ராஜா தலைமையில் அமைப்புச் செயலர் செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். 
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் சரவணன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.அண்ணாதுரை,  ஏஐடியூசி செயலர் நந்தா சிங் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ், மாநிலச் செயலர் எஸ்.எம்.செல்லபாண்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கதிரவன், செல்வஅரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT