மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செப்டம்பர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலோ, மனு மூலமோ கூறி நிவாரணம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.