மதுரை

புதுமணப்பெண் சாவு: போலீஸார் விசாரணை

DIN

கொட்டாம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு  திருமணமான 5 ஆவது நாளில் புதுமணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்த ஒய்யப்பன் மகள் ராஜலட்சுமி (24). இவருக்கும் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், தனது மனைவியை, தந்தை வீட்டுக்கு வீரபாண்டி செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துவந்தாராம். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒய்யப்பன் அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT