மதுரை

மேலூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: பொதுமக்கள் அவதி

DIN

மேலூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் கடந்த சில தினங்களாக எரிந்து வெளிவரும் புகைமூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
மேலூர் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு மலம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கவும் மக்கும் குப்பையை உரமாக்கி
விவசாயிகளுக்கு வழங்கவும் பல லட்சம் செலவில் கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அடிக்கடி குப்பைகளை எரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
எரியும் குப்பைகளில் இருந்து வெளிவரும் புகை சின்னபெருமாள்பட்டியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களும், அருகிலுள்ள 2 பள்ளிகளில் படித்துவரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைக் கிடங்கில் எரியும் தீயை அணைக்க மேலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT