மதுரை

சோலைமலையில் இன்று தங்கத் தேரோட்டம்

DIN


அழகர்கோவில் மலை மேலுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு, தங்கத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.
சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தினசரி சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தங்கத் தேரில் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருள்கிறார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் காலை 11 மணியளவில் பக்தர்கள் புடைசூழ தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கள்ளழகர் கோயில் தக்கார் வி.என். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT