மதுரை

வெள்ளலூரில் மஞ்சுவிரட்டு

DIN

மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் மந்தைக் கருப்பணசுவாமிகோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நீண்ட கால இடைவேளைக்குப் பின் இக்கோயில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். 
காளைகளைப் பிடிக்க முயன்றதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு வெள்ளலூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழவளவு போலீஸார் பாதுப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT