மதுரை

மேலூர் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

DIN

மேலூர் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். 
மேலூர் திரெளபதி அம்மன் கோயில் வைகாசி தீ மிதித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.விழாவில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் மேலூர் மண்கட்டித் தெப்பக்குளம் அருகில்  சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதைத் தொடர்ந்து திரெளபதி அம்மன் கோயிலில் வழிபட்டனர்.
பின்னர், பல்லக்கில்  திரெளபதி அம்மன் வீதியுலா  நகைக் கடை பஜார் வழியாக, பூக்குளித் திடல் வரை நடைபெற்றது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு பூசாரியைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT