மதுரை

கத்திமுனையில் தாய் மகளிடம்  10 பவுன் நகைகள் பறிப்பு

DIN

மதுரை அருகே கத்தியைக் காட்டி தாய், மகளிடம் 10 பவுன் நகைகளை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திங்கள்கிழமை பறித்துச் சென்றார்.
மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி ரோவின்ஸ். இவரது மனைவி சிந்தாதிரை(26) கடைக்கு சென்றுவிட்டு தனது மகளுடன் சைக்கிளில் வீட்டின் அருகே வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கத்தியைக் காட்டி மிரட்டி  அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் வளையல், மகள் கழுத்தில் இருந்த 1 பவுன் சங்கிலி என மொத்தம் 10 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். 
இதுகுறித்து சிந்தாதிரை அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT