மதுரை

ஆடு வாங்கச் சென்றவரிடம் ரூ.1.18 லட்சம் பறிமுதல்

DIN

மதுரை மாவட்டம் எஸ்.கொடிக்குளம் விலக்கில் ஆடு வாங்குவதற்காக சென்றவரிடம் ரூ.1.18 லட்சத்தை தேர்தல் அலுவலர்கள்  ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை எஸ்.கொடிக்குளம் விலக்கு அருகே மதுரை கிழக்குத் தொகுதி பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முருகன் என்பவர் ஓட்டி வந்த டெம்போ வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.1.18 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் முருகன் ஆடு வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
 இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அத்தொகையை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT