மதுரை

பைக் மோதி தனியார் பேருந்து ஊழியர் சாவு

DIN

மேலூரில் சனிக்கிழமை இரவு சாப்பாடு வாங்கச் சென்ற தனியார் பேருந்து ஊழியர் இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள விளாம்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் வீரக்குமார் (20). இவர், மதுரையிலிருந்து சென்னை சென்று திரும்பும் தனியார் சொகுசுப் பேருந்தில் கிளீனராகப் பணிபுரிந்தார். சனிக்கிழமை இரவு மேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்கச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, நாவினிப்பட்டியைச் சேர்ந்த மூவர் இருசக்கரவாகனத்தில் வேகமாக வந்து அவர்மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த வீரக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT