திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி ஹார்விபட்டி, திருநகர், பாண்டியன் நகர், சுந்தர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அவருடன் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாக்குசேகரிப்பின்போது, வேட்பாளர் பேசியது: அதிமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆஸ்டின்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை, தோப்பூரில் துணைக்கோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. நான் வெற்றிபெற்றால் திருப்பரங்குன்றம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.
மேலும் ஹார்விபட்டியில் பாதாளச்சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்தவும் திருநகர், திருப்பரங்குன்றம் பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பேன்.தினமும் மக்களை சந்தித்து அவர்களது தேவையை நிறைவேற்றுவேன் என்றார்.