மதுரை

"பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை'

DIN

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்தார். 
திமுக வேட்பாளர் பா.சரவணணை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஹார்விபட்டி, பாண்டியன் நகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தனர். 
அப்போது கே.வி.தங்கபாலு பேசியது: திமுக ஆட்சிக்கு வந்தால் அதன்தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும். பிரதமர் மோடிக்கு,  தமிழகத்தில் அதிமுக அரசு துணைபோகிறது. பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. வருகிற 23 ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும்,  தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பொறுப்பேற்றவுடன்,  நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ .6,000 உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். அவருடன் பகுதி செயலர் உசிலை சிவா,  வட்டச் செயலர் சுந்தர், கவிஞர் ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT