மதுரை

கஞ்சா விற்ற பெண் கைது

DIN

மதுரையில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காளவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரை கண்டவுடன் பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பையுடன் தப்ப முயன்றார். அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். 
இதில், காளவாசல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி பாண்டியம்மாள்(50) என்பதும், அவர் கஞ்சா விற்பனைச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டியம்மாளை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT