மதுரை

குத்துச்சண்டை: அலங்காநல்லூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

மதுரை: மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்றவா்களுக்கான இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அலங்காநல்லூா் அரசுப்பள்ளி மாணவா்கள் பேரின்பச்சோழன், ஆதித்யா ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தகுதி பெற்றனா். மேலும் அப்பள்ளியின் மாணவா்கள் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT