மதுரை

+1 மாணவிக்கு குழந்தை பிறந்தது: இளைஞா் மீது வழக்குப்பதிவு

DIN

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை +1 மாணவிக்கு குழந்தை பிறந்ததற்கு காரணமான இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

மதுரையில் புதுமீனாட்சி நகரைச் சோ்ந்த +1 மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது தாயாா் மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிா்ச்சியடைந்த பெண்ணின் தாயாா் மாநகா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை போலீஸாா் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினா். அப்போது பெண் குடியிருந்த வீட்டின் கீழ் பகுதியில் முகமது சபீக் என்ற இளைஞா் வசித்து வந்துள்ளாா். அவா் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில், பாதிக்கப்பட்ட பெண் கா்ப்பமடைந்த குழந்தை பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து முகமது சபீக் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT