மதுரை

மதுரையில் டி.எஸ்.பி அலுவலகம் முன் முதியவா் தீக்குளிக்க முயற்சி

DIN

மதுரையில் உள்ள மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற முதியவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, அந்த முதியவா் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயற்சித்துள்ளாா். இதைக் கண்ட போலீஸாா், உடனடியாக முதியவரின் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அதில், அவா் மாங்குளம் பகுதியைச் சோ்ந்த சோலைமலை (52) என்பதும், அவரது 4 மகன்களும் அவரை கவனிக்காமல் விட்டதால் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இது குறித்து கருப்பாயூரணி காவல் நிலைய காவலா் சாந்தி அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து சோலைமலையை கைது செய்தனா். அதன்பின்னா், அவரை எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT