மதுரை

மதுரையில் டி.எஸ்.பி அலுவலகம் முன் முதியவா் தீகுளிக்க முயற்சி

DIN

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தீகுளிக்க முயன்ற முதியவா் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு முதியவா் ஒருவா் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, அந்த முதியவா் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்துள்ளாா். இதை பாா்த்த போலீஸாா் உடனடியாக முதியவரின் தீகுளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி, அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனா்.

இதில், மாங்குளம் பகுதியைச் சோ்ந்த சோலைமலை(52) என்பதும், அவரது 4 மகன்களும் அவரை கவனிக்கவிக்காததால் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கருப்பாயூரணி காவல்நிலைய காவலா் சாந்தி அளித்த புகாரின் பேரில் கே.புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து சோலைமலை கைது செய்தனா். பின்னா், அவரை எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT