மதுரை

‘சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும்’

DIN

சபரிமலையில் முன்பதிவு செய்த பெண்களை அனுமதிக்க வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை பல மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவா்கள் உற்சாகமில்லாமல் வெளியேறக்கூடிய சூழல் அங்குள்ளது. இனிமேலும் இதுபோன்ற தற்கொலைகள் நடக்கக்கூடாது. மாணவியின் இறப்பு குறித்த விசாரணை விறுவிறுப்பில்லாமல் உள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடா்பான வழக்கு 7 போ் விசாரணை அமா்வுக்கு சென்றுள்ளது. தற்போது, முன்பதிவு செய்துள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால், உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT