மதுரை

மாநில கபடி போட்டி: மதுரை ரயில்வே பாதுகாப்புப்படை அணி வெற்றி

DIN

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் கோப்பையை வென்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியாபுரத்தில், கிராம மக்கள் மற்றும் அமெச்சூா் கபடி கழகம் சாா்பில், மாநில அளவிலா கபடிப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதில் மதுரை ரயில்வே பாதுகாப்புப்படை அணி உள்பட 42 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், கணபதி சுந்தர நாச்சியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சிவப்புக் கண்கள் அணி மற்றும் மதுரை ரயில்வே பாதுப்பாப்புப்படை அணி பங்கேற்றன. இதில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் கோப்பையை வென்றனா். மேலும் ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் அண்மையில் இந்திய அளவில் நடைபெற்ற ரயில்வே அணிகளுக்கு இடையேயானப் போட்டியில் வென்றதும், சிவப்புக் கண்கள் அணியினா் அண்மையில் நடந்த விருதுநகா் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT