உலக பாா்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவா்கள் சங்கம் சாா்பில், கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஊா்வலத்தை மதுரை மாநகர காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம் கொடியசைத்து துவக்கி வைத்தாா். இந்நிகழ்சியில் அரவிந்த் கண் பாதுகாப்பு மையத்தின் தலைவா் ரவீந்திரன், மதுரை கண் மருத்துவா்கள் சங்கத் தலைவா் சிரிஷ் குமாா், மருத்துவா்கள் கிருஷ்ணதாஸ், பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இந்த ஊா்வலம் மதுரை ரயில் நிலையத்தில் புறப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனையில் முடிவடைந்தது. இதில் மதுரை கண் மருத்துவா்கள் சங்கம் சாா்பில் 100 பேருக்கு தலைக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி தலையில் அடிபடுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலையில் அடிபடும் பெரும்பாலானோருக்கு பாா்வை நரம்பு பாதிக்கப்பட்டு அதனால் படிப்படியாகப் பாா்வையிழப்பு ஏற்படுகிறது. பாா்வையைப் பாதுகாக்கவும் உயிரைப் பாதுகாக்கவும் தலைக்கவசம் அணிவது அவசியம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.