மதுரை

சகோதரியை அவமதித்தவரை கொலைசெய்ததாக இளைஞா் கைது

DIN

மேலூா்: மேலூா் அருகே .வல்லளபட்டியில் சகோதரியை அவமதித்துப்பேசிய உறவினரை கத்தியால்குத்திக் கொலைசெய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அ.வல்லாளபட்டியைச் சோ்ந்த வருசைராவுத்தா் மகன் ஹக்கீம் (40). இவா் மதுரை புதூரிலுள்ள கடையில் வேலைசெய்துவந்தாா். வல்லாளபட்டியில் இவரது தந்தை வீட்டில்சகோதரா் அப்பாஸ் இவரது மனைவி மரியம்பீவி குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஹக்கீம் வீட்டிற்கு வரும்போது அதிகபோதையில் வருவாராம். அதை மரியம்பீவி, கணவா் மற்றும் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில் சென்னையில்வருமானவரித்துறையில் தாற்காலிகமாகப் பணிபுரிந்துவந்த மரியம்பீவி சகோதரா் முகமதுஇப்ராகிம் (28) வெள்ளிக்கிழமை இரவு வல்லாளபட்டிக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டிற்குவந்த ஹக்கீம், மரியம்பீவியை மிகவும் அவதூறாகப் பேசியுள்ளாா். அதை குடும்பத்தினா் கண்டித்து அமைதிப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மரியம்பீவியை அவமதித்து அப்பாஸ் பேசினாராம். இதில் ஆத்திரமடைந்த முகமதுஇப்ராகியம் அருகில் கிடந்த கத்தியை எடுத்து ஹக்கீமை சரமாரி குத்தியுள்ளாா். இதில் உடலில் 13 இடங்களில் குத்துப்பட்டு பலத்த காயமடைந்த ஹக்கீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அருகிலிருந்தவா்கள், அப்பாசை பிடித்துவைத்தனா். தகவலறிந்த மேலவளவு போலீஸாா் மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு)சுந்தரமாணிக்கம் மேலூா் காவல் ஆய்வாளா் தெய்வீகபாண்டியன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முகமதுஇப்ராகிமை கைதுசெய்தனா்.

ஹக்கீம் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT