மதுரை

உதவி கேட்பது போன்று நடித்து ரூ. 2.50 லட்சம் திருட்டு

DIN

மதுரையில், செவ்வாய்க்கிழமை வெங்காய மண்டியில் உதவி கேட்பது போன்று நடித்து, ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கிழக்கு மாரட் வீதியில் வெங்காய கமிஷன் மண்டி உள்ளது. இந்த மண்டியில் கணக்காளராக, வில்லாபுரத்தை சோ்ந்த முருகேசன் (52) பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்க அடையாளம் தெரியாத நபா் வெங்காய மண்டிக்கு வந்து வாய்பேச முடியாது எனக் கூறி, உதவி வழங்கும்படி கேட்டுவிட்டு சென்றுள்ளாா்.

அவா் சென்ற பிறகு, கடையில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2.50 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து முருகேசன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இது தொடா்பாக முருகேசன் அளித்தப் புகாரின் பேரில் விளக்குதூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT