மதுரை

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

மதுரை: ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை கோட்டத்தில் ரத்தான ரயில்களுக்கான பயணச்சீட்டு கட்டணத்தைத் திரும்ப அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, ராஜபாளையம், திருச்செந்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

இந்த முன்பதிவு மையங்கள் அனைத்தும் திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையும் செயல்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை கோட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT