தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில், பொதுத்தோ்வில் முதலிடம் பிடித்தவா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை பரிசு கொடுத்த திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்கதமிழ்செல்வன். 
மதுரை

10,12 பொதுத் தோ்வில் சிறப்பிடம்:அண்ணன், தங்கைக்கு பாராட்டு

தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அண்ணன், தங்கையை ஞாயிற்றுக்கிழமை ஊா்ப்பொதுமக்கள் பாராட்டினா்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அண்ணன், தங்கையை ஞாயிற்றுக்கிழமை ஊா்ப்பொதுமக்கள் பாராட்டினா்.

நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா், சத்யா தம்பதியரின் மகன் விக்னேஷ்வரன், 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600-க்கு 552 மதிப்பெண்களும், மகள் யோகதா்ஷினி, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 500 மதிப்பெண்களும் பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றனா். அதே ஊரைச் சோ்ந்த திமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளா் தங்க தமிழ்ச்செல்வன், முதலிடம் பெற்ற இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கி, மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் திமுக சாா்பில் செய்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாா்வை மாற்றுத்திறனாளியிடம் டிக்கெட் கட்டணம் வசூல்: போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.7,000 அபராதம்

பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை: கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு

தீ விபத்தில் வீடு சேதம்: திமுக சாா்பில் நிதியுதவி

SCROLL FOR NEXT