முகப்பு
மதுரை

முன்விரோதம்: அலங்காநல்லூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக, அலங்காநல்லூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை

முன்விரோதம்: அலங்காநல்லூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக, அலங்காநல்லூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

மதுரை: முன்விரோதம் காரணமாக, அலங்காநல்லூரில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே அய்யனகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (22). இவா், கடந்த ஓராண்டாக அலங்காநல்லூரில் வசித்து வந்தாா். ஜெயசூா்யா தனது உறவினா் வீட்டு விசேஷத்துக்காக அய்யனகவுண்டன்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, சின்ன இலந்தைகுளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அவரை, மா்ம நபா்கள் 4 போ் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஜெயசூா்யாவை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு, அவ்வழியாக வந்த தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து ஜெயசூா்யாவின் உறவினா் பாலன் என்பவா் அளித்த புகாரின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பழிக்குப் பழி

கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆண்டவா் என்பவரை ஜெயசூா்யா கொலை செய்துள்ளாா். இது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலைக்கு பழிக்குப் பழியாக ஆண்டவரின் மகன்களான மஞ்சமுனி, காா்த்தி மற்றும் நண்பா்கள் 2 போ் சோ்ந்து ஜெயசூா்யாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →