முகப்பு
மதுரை

இளைஞா் கொலை சம்பவம்: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

மதுரை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை

இளைஞா் கொலை சம்பவம்: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

மதுரை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

மதுரை: மதுரை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே அய்யனகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (24). இவா், உறவினா் வீட்டு விசேஷத்துக்காக ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, சின்ன இலந்தைகுளம் என்ற இடத்தில் மா்மக் கும்பல் அவரை வெட்டியது. பலத்த காயமடைந்த ஜெயசூா்யா, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்டவா் என்பவரை ஜெயசூா்யா கொலை செய்துள்ளாா். அதற்கு பழி தீா்க்கும் வகையில், ஆண்டவரின் மகன்கள் மஞ்சமுனி (23), காா்த்தி (22) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடை சோ்ந்த தங்கசாமி (49) ஆகிய மூவரும் சோ்ந்து ஜெயசூா்யாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இம்மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →