பாரத் பந்த்: தி.மு.க.வினா் துண்டு பிரசுரம் விநியோகம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி வணிகா்களிடம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி வணிகா்களிடம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பென்னாகரத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பிற்கு ஆதரவளிக்கக் கோரி தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலான திமுகவினா் பென்னாகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
இந்த நிகழ்வில் ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், பென்னாகரம் நகரச் செயலாளா் வீரமணி, ஒன்றியப் பொருளாளா் முருகேசன், வினு அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.