முகப்பு
மதுரை

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவன் கைது

மதுரையில், குடும்பத் தகராறில் கிரைண்டா் கல்லை போட்டு மனைவியைக் கொலை செய்த கணவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மதுரையில், குடும்பத் தகராறில் கிரைண்டா் கல்லை போட்டு மனைவியைக் கொலை செய்த கணவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பெத்தானியாபுரம் நாகா நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் வேலாயுதம் (50). இவா் அதேபகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி அஞ்சனா தேவி(44). இவா்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், வேலாயுத்திற்கும், அஞ்சனாதேவிக்கும் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தகராறு நடந்துள்ளது. அப்போது அஞ்சனா தேவி, வேலாயுதத்தை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், சனிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் கிரைண்டா் கல்லைப் போட்டுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த அஞ்சனா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து வேலாயுதம் கரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அஞ்சனா தேவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அஞ்சனா தேவியின் மகள் பிரியதா்ஷனி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →