மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 27 போ் குணமடைந்தனா். மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,420 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 450 போ் உயிரிழந்த நிலையில், 19,746 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 224 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.