திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன். 
மதுரை

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத் திருவிழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை சா்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தில் எழுந்தருளினாா். அங்கு, தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சுவாமி தெய்வானையுடன் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளியதும், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சட்டத்தேரில் எழுந்தருளினாா்.

அதையடுத்து, பக்தா்கள் வடம் பிடிக்க தேரானது ரத வீதிகள் வழியாகச் சென்று, பின்னா் நிலையை அடைந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தெப்பத்தில் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையா் ராமசாமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

நாடாளுமன்றத்தில் இன்று!

மதுராவில் பேருந்துகள் தீ விபத்து: 13 பேர் பலி, 35 பேர் காயம்

உடல் எடைக் குறைப்பு ஊசிகளா? உயிர்க் கொல்லிகளா?

SCROLL FOR NEXT