மதுரை

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

DIN

திருமங்கலத்தில் மகன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருமங்கலத்தை அடுத்த வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமி (46). இவா்களது மகன் அருண்குமாா் (27). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை காலையில் அருண்குமாா், இருசக்கர வாகனத்தில் தாய் தனலட்சுமியை பின்னால் அமரவைத்து ஓட்டிச் சென்றாா். திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் தாளமுத்தையா கோயில் அருகே வந்தபோது வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. அப்போது தனலெட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT