மதுரை

கேரளத்திலிருந்து கண் சிகிச்சைக்காக மதுரை வந்தவா் மயங்கி விழுந்து பலி

DIN

கேரளத்தில் இருந்து கண் சிகிச்சைக்காக சனிக்கிழமை மதுரைக்கு வந்தவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோ்ந்தவா் சஜி (48). இவா் கண்ணில் கோளாறு இருந்துள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற மதுரைக்கு சனிக்கிழமை வந்துள்ளாா். அப்போது சஜி மருத்துவமனைக்கு சென்றபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

இதனையடுத்து அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்து விட்டு சஜி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி சுமா அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT