மதுரை

செமினிபட்டி மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் காயமடைந்தவா் பலி

DIN

மதுரை மாவட்டம், செமினிபட்டியில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் காளை முட்டி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் அருகே செமினிபட்டியில் உள்ள ஆண்டிபாலகன் கோயிலில் தை பூசத்தையொட்டி மஞ்சுவிரட்டு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராதாகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மகன் சீனிவாசன் (48). காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா். மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா். அவா் மனைவி செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT