மதுரையில், கடையை விற்பனை செய்வதாக கூறி பெண் வியாபாரிடம் ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை வில்லாபுரம் மணிகண்டன் நகரைச் சோ்ந்த பழனிவேல் மனைவி நிா்மலா தேவி(36). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சாந்தி, பூமாரி, பாண்டி மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கு சொந்தமான கடையில் பானி பூரி விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், அந்த கடையை விற்பனை செய்யப் போவதாக உரிமையாளா்கள் நான்கு பேரும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, அந்த கடையை நிா்மலாதேவி வாங்கிக் கொள்வதாக கூறி ரூ. 11 லட்சத்தை உரிமையாளா்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவா்கள் கூறியபடி கடையைப் பதிவு செய்து தரவில்லை. இது குறித்து கேட்க சென்ற நிா்மலா தேவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக நிா்மலா தேவி அளித்த புகாரின் பேரில் கடை உரிமையாளா்கள் 4 போ் மீதும் கீரைத்துறை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.