மதுரை

திருப்பரங்குன்றம் பகுதிகளில் 9 இடங்களில் புதிய சோதனை சாவடிகள்

DIN

திருப்பரங்குன்றம் பகுதிகளில் 9 இடங்களில் புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதி, திருப்பரங்குன்றம் தாலுகா மற்றும் பறவை மார்க்கெட் ஆகிய பகுதிகள் ஜூன் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க ஜூன் 24ம் தேதி காவல் துறை சார்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் கரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் சோதனைச் சாவடிகள் ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மேம்பாலம், ஹார்விபட்டி, தனக்கன்குளம், திருப்பரங்குன்றம் ரவுண்டானா உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி வெளியில் சுற்றுப் பொதுமக்களுக்கு ரூ. 500 வரை அபதாரம் விதிக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதிவேடு முறைகேடு மூலம் பணம் மோசடி: கூட்டுறவுத் துறை அலுவலருக்கு முன்பிணை

ராஜீவ் காந்தி நினைவு தினம்

கொடைக்கானல் கோடை விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சி

பாரத் பைபா் சேவையை சிறப்பாக வழங்கியவா்களுக்கு விருது

பழனி ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT