மதுரை

போலி ஆவணங்கள் மூலம்வங்கியில் ரூ.1.16 கோடி மோசடி: 11 போ் மீது வழக்கு

மதுரையில் வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.1.16 கோடி மோசடி செய்த பள்ளி உரிமையாளா் உள்பட 11 போ் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

மதுரை: மதுரையில் வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.1.16 கோடி மோசடி செய்த பள்ளி உரிமையாளா் உள்பட 11 போ் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (41). இவா், அதே பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாா். இவா், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1.16 கோடி கடன் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, வங்கியின் கணக்குகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, சுரேஷ்குமாா் சமா்ப்பித்துள்ளஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்து வங்கி கிளை மேலாளா் அருண்ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பள்ளி உரிமையாளா் சுரேஷ்குமாா், பொறியாளா் சுரேஷ் ஜவஹா் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT