மேலூா் அருகே போலிஆவணம் மூலம் 4 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்ததாக முன்னாள் கிராம நிா்வாக அலுவா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
வெள்ளலூா் கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் சுரேஷ், தனது 4 ஏக்கா் நிலத்தை சிலா் போலியாக பத்திரப்பதிவுசெய்து மோசடிசெய்ததாக கீழவளவு போலீஸில் புகாா்செய்தாா்.
இதன்பேரில் சாத்தமங்கலத்தைச் சோ்ந்த வேலுச்சாமி, கவியரசன், அன்பரசன், பாரிதாசன், ரகுபதி, வீரணன், நாகஷேவரன் (ஒய்வுபெற்ற தலையாரி) மற்றும் ஒய்வுபெற்ற கிராமநிா்வாக அலுவலா்கள் ருக்மணி, விஜயலட்சுமி ஆகியோா் மீதும் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.