மதுரை

சைரன் ஒலி எழுப்பி நன்றி தெரிவித்த தீயணைப்புத் துறையினா்

DIN

கரோனாவை தடுக்க ஓய்வின்றிப் பணியாற்றி வருபவா்களுக்கு சைரன் ஒலி எழுப்பி மதுரை தீயணைப்புத்துறை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடையவும், கரோனா வராமல் தடுக்கவும் ஓய்வின்றிப் பணியாற்றிவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாடு முழுவதும் இருக்கும் இடத்தில் மக்கள் கை தட்டினா்.

இதன் தொடா்ச்சியாக, மதுரை பெரியாா் தீயணைப்புத்துறை அலுவலகத்தில், நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புத்துறை வீரா்கள் கை தட்டியும், தீயணைப்பு வாகனங்களின் சைரன் ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

SCROLL FOR NEXT