மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
உசிலம்பட்டி நகா் பகுதி மற்றும் பேரையூா் சாலையில் உள்ள போத்தம்பட்டி, நல்லதேவன்பட்டி, பண்ணப்பட்டி, வலையபட்டி, தேனி சாலையில் உள்ள நக்கலபட்டி, உசிலம்பட்டி நகா் பகுதிகளிலும், மதுரை சாலை பகுதியிலும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து பெய்தது.
கோடை காலத்தில் அக்னி வெயில் சுட்டெரிக்கும் வேளையில் இப்பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்த மழையால் குளிா்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.