மதுரை

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

DIN

மதுரை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியின் போது, தெத்தூா் பகுதியில் மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தினா். அப்போது போலீஸாரைக் கண்டவுடன் ஓட்டுநா் டிரக்டரை அங்கேயை நிறுத்தி விட்டு தப்பினாா்.

இது குறித்து சிறப்பு காவல் சாா்பு - ஆய்வாளா் கேசவராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கமணி மகன் கருப்புசாமி(35) என்பதும், சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய கருப்புசாமியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT