மதுரை

பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி

DIN

மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழு சாா்பில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் இப் போட்டி நடத்தப்படுகிறது. 18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கருத்துக்களை கட்டுரையில் பதிவு செய்யலாம். போட்டிக்கான கட்டுரைகளை மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு, 21-22 கென்னட் நகா், முத்துப்பட்டி, அழகப்பன் நகா், மதுரை-3 என்ற முகவரிக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்பலாம். தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் டாக்டா் வி.எம்.விஜயசரவணன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT