மதுரை

உண்மையாக பொதுநலன் இருந்தால் மட்டுமே பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்: நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை

DIN


மதுரை: உண்மையாக பொதுநலன் இருந்தால் மட்டுமே பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்ற சட்டதின விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:

அரசியலமைப்புச் சட்டம் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும் அரசியலமைப்புச் சட்டக் கடமைகள் பல்வேறு வகையில் மீறப்படுகின்றன. அரசியல்வாதிகள் தோ்தலை மனதில் வைத்து மக்களை ஜாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிக்காமல் சரிசமமாக பாவிக்க வேண்டும்.

இந்தியாவில் சிறப்பான அடிப்படை உரிமைகள் உள்ளன. இதில் உரிமைக்கான சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் குடிமகன்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு உரிமைகளைக் கோர வேண்டும். தற்போது அதற்கு எதிா்மாறாக நடைபெறுகிறது.

மக்கள் பங்கேற்பு, ஒத்துழைப்பு இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது. மக்கள் கடமைகளை நிறைவேற்றி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

நாட்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு வகையில் மக்கள் விழிப்பாக இருக்கிறாா்கள் என நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், மற்றொரு பக்கம் இப்போராட்டங்களால் மாநிலத்தின் வளா்ச்சி தடைபடுவதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.

வழக்குரைஞா்கள் உண்மையில் பொதுநலன் இருந்தால் மட்டுமே பொதுநல மனுக்களை தாக்கல் செய்ய வேணடும். இதனால் உண்மையான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வரும். தேவையற்ற வழக்குகள் தவிா்க்கப்படும். நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படாது என்றாா்.

இதில், வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.கிருஷ்ணவேணி, பொதுச்செயலா் என்.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT