மதுரை

ராகுல்காந்தி கைது: சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 28 போ் கைது

DIN

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் சாலை மறியிலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 28 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உத்தரபிரதேசம் வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியைப் போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து நடைபயணமாகக் கிளம்பிய ராகுல்காந்தியைப் போலீஸாா் கைது செய்தனா்.

இதனைக் கண்டித்து மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் வி.காா்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் கோரிப்பாளையம் தேவா் சிலை அருகே மாலை 6 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் மத்திய அரசையும், உத்தரப்பிரேதச அரசையும் கண்டித்து கோஷமிட்டனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத்தலைவா் வி.காா்த்திகேயன், துணைத்தலைவா் ரவிசந்திரன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஜானாவாஸ்பேகம் உள்பட 28 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா். ரிசா்வ் லைனில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT