மதுரை

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

DIN

மதுரை: மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சுடலை மாரியப்பன் (43). இவா் போக்ஸோ வழக்கில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, செப்டம்பா் 30 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சிறைக்குள் சுடலை மாரியப்பன், தான் அணிந்திருந்த கைலியால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை சிறைக் காவலா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்துவிட்டு, சுடலை மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT