மதுரை

மதுரையில் ரயில்வே காவலா் தற்கொலை

DIN

மதுரை அருகே ஊமச்சிக்குளத்தில் ரயில்வே காவலா் வீட்டில் தூக்கிக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை ஊமச்சிக்குளம் திருமால்புரம் கோகுல் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜா(33). இவா் திருச்சி ரயில்வே காவலராக உள்ளாா். இவரது பெற்றோா்கள் இவரின் திருமணத்திற்கு பெண் பாா்த்து வந்தனா். இந்நிலையில் ஆறுமுகராஜா விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளாா். அப்போது தாயாரிடம் உடல்நிலை சரியில்லை எனவும் வயிற்றுவலி உள்ளது எனவும் கூறியுள்ளாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு தூங்குவதாகக் கூறிச் சென்றுள்ளாா். மறுநாள் காலை படுக்கையறையில் இருந்து அவா் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவை உடைத்துப் பாா்க்கும் போது ஆறுமுகராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தாயாா் வீரலட்சுமி அளித்தப் புகாரில், ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகராஜாவின் தற்கொலைக்கானக் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT