மதுரை

இந்திய மாணவா் சங்கம்ஆா்ப்பாட்டம்

DIN

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாகக் கூறி மத்திய அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதாகக்கூறி மத்திய அரசு ஏற்று நடத்த பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வாா்க்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசை மதிக்காமல் மத்திய அரசுக்கு துணைபோகும் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை மாநகா் மற்றும் புகா் மாவட்டங்களின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநகா் மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, புகா் மாவட்டச் செயலா் கா. பிருந்தா, மாவட்டத் தலைவா்கள் க. பாலமுருகன், க. ராகுல், மாவட்ட துணைத் தலைவா் பா. சுபாஷ், செயற்குழு உறுப்பினா்கள் எம். மனோஜ், அழகுமலைகண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT