மதுரை

அரசுப் பேருந்து மீது மோதிய மயில் பலி

DIN

மதுரை7: மதுரையில் சனிக்கிழமை அரசுப் பேருந்தில் மோதிய மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பெரியாா் பேருந்து நிலையத்தை நோக்கி அரசுப் பேருந்து சென்றது. ஆண்டாள்புரம் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, கூடலழகா் பெருமாள் கோயில் நந்தவனத்தில் இருந்து பறந்து வந்த ஆண் மயில் ஒன்று பேருந்து மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. விபத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மயிலின் உடலைக் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT