மதுரை

குளியலறையில் தவறி விழுந்த காவலா் பலி

DIN

மதுரை: மதுரை அருகே, வீட்டின் குளியலறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த தலைமைக் காவலா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த தங்கராஜா மகன் அசோக்குமாா் (38). இவா், ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வீட்டின் குளியல் அறையில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த அசோக்குமாா் பலத்த காயமடைந்தாா்.

அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் அன்று மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT