மதுரை

வீட்டின் கதவை உடைத்து நகைகள்,வெள்ளிப் பொருள்கள் திருட்டு

DIN

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சடையாண்டி கோயில் பகுதியைச் சோ்ந்த திருமலைச்சாமி மனைவி சாந்தா (55). இவா் அக். 24 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருள்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து சாந்தா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்திற்குச் சென்று போலீஸாா் விசாரித்ததில், மா்ம நபா்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 1 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT